MARCH 17 ,2015
மாத உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தரக்கோரி புதுச்சேரியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.3000 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ள நிலையில் 18 சிறப்பு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நிரந்தர சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனே அமல்படுத்த வேண்டும்.
விலைவாசி உயர்ந்துள்ள சூழலில் மாத உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 15 கிலோ அரிசியை வழங்க வேண்டும்,மாற்றுத்திறனாளி களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் ஒன்றை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும், 100 சதம்ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு 3 விழுக்காடு ஒதுக்கீட்டை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அமல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை விலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில்நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு புதுச்சேரி அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலமுருகன், மாயவன்,முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச் செயலர் எஸ்.நம்புராஜன் உரையாற்றினார் முற்போக்கு எழுத்தாளர் சங்கபொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் போராட்டத்தை துவக்கி வைத்தார். சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வி.பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாத உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தரக்கோரி புதுச்சேரியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.3000 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ள நிலையில் 18 சிறப்பு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நிரந்தர சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனே அமல்படுத்த வேண்டும்.
விலைவாசி உயர்ந்துள்ள சூழலில் மாத உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 15 கிலோ அரிசியை வழங்க வேண்டும்,மாற்றுத்திறனாளி களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் ஒன்றை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும், 100 சதம்ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு 3 விழுக்காடு ஒதுக்கீட்டை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அமல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை விலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில்நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு புதுச்சேரி அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலமுருகன், மாயவன்,முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச் செயலர் எஸ்.நம்புராஜன் உரையாற்றினார் முற்போக்கு எழுத்தாளர் சங்கபொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் போராட்டத்தை துவக்கி வைத்தார். சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வி.பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

No comments:
Post a Comment