புதுச்சேரி,ஜீன்.20-
மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று மாற்று திறனாளிகள் மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கானோர் சங்கத்தின் 2வது புதுச்சேரி பிரதேச மாநாடு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கட்டிடத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு சங்கத்தின் துணைத்தலைவர் எஸ்.மாயவன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் மாநாட்டை துவக்கி
வைத்து பேசினார்.எல்ஐசி முகவர் சங்கத்தின் தமிழ் மாநில செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி மாநாட்டை வாழ்மாற்று திறனாளிகள் மாநாடுதி பேசினார்.சங்கத்தின் செயலாளர் ஆர்.சரவணன் மாநாட்டு வேலை அறிக்கை வாசித்தார்.இறுதியாக சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக எஸ்.மாயவன், செயலாளராக குப்புசாமி,பொருளாளராக பாலமுருகன்,துணைத்தலைவர்களாக எஸ்.ராமச்சந்திரன், முருகன், இணைச்செயலாளர்களாக ஆர்.சரவணன்,சங்கர், மற்றும் குமார், சங்கர், செல்வராஜ், ஆனந்தராஜ்,பிரசன்னா,பார்த்திபன்,பாரி,ராஜேஷ்,சொர்னா உள்ளிட்ட 16பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
மாற்று திறனாளிகளுக்கு கல்வியிலும்,வேலைவாய்பிலும் 5 விழுக்காடு இடஒதுக்கீடு புதுச்சேரி அரசு வழங்க வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். அனைத்து அரசுதுறை அலுவலகங்களில் சருவல் நடைமேடை அமைக்க வேண்டும்.
24ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் உள்ள புதுச்சேரியில், அவர்களுக்கென தனியாக நலவாரியம் உருவாக்க வேண்டும்.தனியார் நிறுவனங்களில் வேலைவாய்பில் 3விழுக்காடு வேலைவாய்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.



No comments:
Post a Comment