புதுச்சேரி,பிப்-16
மாற்று திறனாலிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாலிகளின் கருத்தரங்கம்; புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அனைத்தவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்கள் உரிமைகளுக்கான சங்கத்தின் திறந்தவெளி கருத்தரங்கம் காந்திவீதியில் நடைபெற்றது.சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆர்.சரவணன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார்.சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,மாற்றுதிறனாளிகள் எட்டு வகையாக உள்ளனர.; எந்த வகையாகவும் இன்றைக்கு ஒவ்வெருவர் வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.உடலின் மாறுபாட்டால் மட்டுமே மாற்றுதிறனாலிகள் என்று அடையாள படுத்தவது மட்டும் இல்லாமல் மன அழுத்த நோயாலும் பாதிக்கபடுபவர்கள் மாற்றுதிறனாலிகளாக உள்ளனர்.தேர்தல் நேரத்தில் தேர்தல் அடையாள அட்டை வழங்க வீடு தேடி வருவதைப்போல் மாற்றுதிறனாலிகளை கண்டரிய அடையாள அட்டையை மத்திய மாநில அரசுகள் வீடுதேடி வழங்குவதற்கு முன்வரவேண்டும்.மேலும் வருமை ஒழிப்பு திட்டத்தில் மாற்றுதிறனாலிகளை சேர்த்து நல திட்டங்களை வழங்க வேண்டும் என்றார்.மாற்றுதிறனாலிகளை பாதுகாத்துவருபவர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேரலாம் இது மற்ற சங்கங்களில் இல்லாத வசதி இந்த சங்கத்தில் உள்ளது என்றார்.
முன்னதாக சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.ராஜாங்கம்,சங்க பொருளாளர் குப்புசாமி,குமார்,கார்த்திக்,ஜெகன் உள்ளிட்ட திரளான மாற்றுதிறனாலிகள் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.
