Sunday, December 9, 2012

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
தமிழகம்,புதுவையில் நடைபெற்றது
சென்னை, டிச. 3-
மாற்றுத் திறனாளிகள் உத வித்தொகை பெற குடும்ப அட் டையிலிருந்து பெயர் நீக்கும் கொடுமையை கண்டித்து உலக மாற்றுத் திறனாளிகள் தினமான திங்களன்று தமிழ கம் முழுவதும் 84 இடங்களில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. புதுவையில் அரசுப் பணிகளில் மாற்றுத்திற னாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி தர்ணா போராட் டம் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக் கான மாதாந்திர உதவித் தொகை வழங்க தமிழக அரசு படுபிற்போக்குத்தனமான அறிவுக்கு ஒப்பாத கடும் விதி முறைகளை கடைப்பிடித்து வருகிறது. இதனால் லட்சக் கணக்கான மாற்றுத்திறனாளி கள் எந்த உதவியும் இல்லாமல் தமிழகத்தில் தவியாய் தவிக் கின்றனர். எமது சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத் தின் விளைவாக வயது வரம் பை மட்டும் “45 வயதுக்கு மேல் தரப்படும் என்பதற்கு பதிலாக 18 வயதுக்கு மேல் தரப் படும்” என்று அரசு சமீபத்தில் விதியை மாற்றம் செய்துள்ளது. இதுவும் ஏற்புடையதல்ல. எனவே மாத உதவித்தொகை வழங்க கடைப்பிடித்து வரும் அனைத்து விதிமுறைகளை யும் நீக்க வலியுறுத்துவதோடு, எந்த நிபந்தனையுமின்றி உத வித்தொகையை வழங்க வேண்டும். ஆணையிருந்தும் அமலுக்கு வராத திட்டங்கள்ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து அரசு மருத் துவமனைகளிலும் கண்ணால் பார்த்து அறிய முடிகிற ஊனத் திற்கு ஏதாவது ஒரு அரசு மருத் துவர் சான்று அளித்தாலே செல்லத்தக்க வகையில் மாற் றுத்திறனாளி அடையாள சான்று வழங்குவதற்கு அரசாணை போட்டு ஒன்றரை ஆண்டுக ளுக்கு மேலாகியும் இதுவரை எங்குமே அமலுக்கு வரவில் லை. இதனால் மாற்றுத்திற னாளிகள் அடையாளச் சான்று பெற கடும் அலைக்கழிப்புக்கு தொடர்ந்து உள்ளாக்கப்படு கின்றனர். மாற்றுத் திறனாளி நலவாரி யம் கடும் ஊனமுற்று முடங் கிப்போயுள்ளது.
மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து, மாற்றுத் திறனாளி அரசு திட்டங்களை கண்காணிக்க 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை போடப்பட்டும் இதுவரை எந்த மாவட்டத்திலும் அமலுக்கு வராததால் கடும் முறைகேடு கள் தொடர்ந்து நிலவுகின்றன.மாற்றுத்திறனாளி உலக தினமாகிய திங்களன்று மேற் கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கோரிக்கைகள் நிறை வேறும் வரை காத்திருக்கும் போராட்டம் என தமிழகம் முழுவதும் 5408 பெண்கள் உட்பட சுமார் 12 ஆயிரம் மாற் றுத்திறனாளிகளை கோரிக் கை மனுக்களுடன் திரட்டி மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகங்களுக் குள்ளும் தாலுகா தலைநகரங் களில் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்க ளில் 31 மாவட்டங்களில், 84 மையங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, உளுந்தூர் பேட்டையில்கலந்து கொண்டு 10 பேருக்கு உடனடி ஆணை பெற்றுத்தந்தார்
. மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன் சென்னை ஆலந்தூரில் கலந்து கொண்டார். மேலும் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் கலந்து கொண்ட அரியலூரில் 96 பெண்கள் உட்பட 262 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக் கல்லில் கலந்து கொண்ட 65 பேரில் 50 பேர் கைது செய்யப் பட்டு மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் அனை வருக்கும் சங்கத்தின் மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித் துக்கொண்டுள்ளது.அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக் கீடு வழங்கக்கோரி புதுவை யில் தர்ணாப்போராட்டம் நடை பெற்றது.


புதுச்சேரி,டிச-5
வேலைவாய்பில் மூன்று சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தகோரி மாற்றுதிறனாலிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு  வேலைவாய்ப்பில் மாற்றுதிறனாலிகளுக்கு 3சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.சட்டமன்ற தேர்தலில் அறிவித்தப்படி மாதம் ரூ.3ஆயிரம் உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
 சமூகநலத்துறை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி அனைத்துவகை மாற்றுதிறனாலிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் பிரதேச துணைதலைவர் மாயவன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் சரவணன் முன்னிலைவகித்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,துணை செயலாளர் சுமதி,சங்கத்தின் பிரதேச தலைவர் ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சங்க நிர்வாகிகள் குப்புசாமி,மணிகண்டன் உள்ளிட்ட திரளான மாற்றுதிறனாலிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Sunday, October 14, 2012

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ் இணையதளம் ஆளுநர் கே.ரோசய்யா துவக்கி வைத்தார்



சென்னை, அக். 14-
மாற்றுத்திறனாளிகளுக் காக “ஊனமுற்றோர் உரி மைக்குரல் குரல்” என்ற இத ழும், தமிழ் இணையதள மும் (றறற.வயசயவனயஉ.டிசப) தொடங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆளுநர் மாளிகை யில் உள்ள அன்னபூர்ணா அரங்கில் ஞாயிறன்று (அக்.14) இதற்கான வெளியீட்டு விழா நடந்தது. ஆளுநர் ரோசய்யா ஊனமுற்றோர் உரிமைக்குரலின் முதல் இத ழையும், இணைய தளத்தை யும் துவக்கி வைத்து சிறப் புரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறு கையில், இந்த இணைய தளம் மூலம் சங்க நடவடிக் கைகள் குறித்து உறுப்பினர் கள் கூடுதலாக அறிந்து கொள்ள முடியும்.எந்த ஒரு இணையதள மும், அன்றாட நிகழ்வு களை உடனடியாக தங்கள் வலைத்தளத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.“கடமையுணர்வு, அர்ப்ப ணிப்பு, நேர்த்தி, சுயநலம் இல்லாத சேவை ஆகியவை ஒரு நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும். இன்றைக்கு காளான்கள் போல புதிதாக பல அமைப்புகள் உருவெ டுத்து வருவதைக் காண்கி றோம். ஆனால் உண்மை யான அமைப்புகளை கண் டறிவதற்கு மிக நுணுக்க மான கண்காணிப்பு தேவைப்படுகிறது.தொண்டு நிறுவனங்கள் அல்லது சங்கங்கள் அல் லது மாற்றுத்திறனாளி களுக்கான அமைப்புகள் தங்கள் பணிகளுக்குள் மட் டும் சுருங்கிவிடக்கூடாது. அவர்கள் மாற்றுத்திறனாளி களின் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும். மாற்றுத்திறனா ளிகளுக்கும் சமூகத்தின் இதர மக்களுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கவேண்டும்” என்றும் ஆளுநர் வலி யுறுத்தினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற இந்த துவக்க நிகழ்ச்சியில் சங்கத்தின் புரவலர்கள் என். ராம், சீர்காழி டாக்டர் ஜி. சிவசிதம்பரம், தாவூத் மியா கான், சங்கத்தின் கௌரவ தலைவர் எச். ராமகிருஷ் ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள், சர்வ தேச விதிமுறைகள், தேசிய சட்டங்கள், அவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள அரசு திட்டங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய, மாநில அரசாணைகள் பற் றிய பல்வேறு தகவல்களை பொதுமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகை யில் “ஊனமுற்றோர் உரி மைக்குரல்” என்கிற இத ழினை தொடர்ந்து வெளி யிட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் முடிவு செய்தது. பார்வையற்றவர்களும் பயன்படுத்தலாம்றறற.
வயசயவனயஉ.டிசப தமிழ் இணையதளம் மாற்றுத்திற னாளிகளுக்கு வேண்டிய பல் வேறு தகவல்கள், படிவங் கள், ஆணைகள் உள்ளிட்ட வற்றை பதிவிறக்கம் செய்து கொள்கிற வகையிலும், தமிழ் பேசும் மாற்றுத் திற னாளிகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தமி ழில் உருவாக்கப்பட்டுள் ளது. பார்வையற்றவர்களும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்த முடியும். சூஏனுஹ என்கிற மென்பொருளை தங்களுடைய கணினியில் பொருத்திக்கொள்வதன் மூலம் இந்த வசதியைப் பெற முடியும்.

Thursday, October 11, 2012

மாற்று திறனாளிகளின் உரிமைகளுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி,செப்-30
மாற்று திறனாளிகளின் உரிமைகளுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு புதுச்சேரி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போரின் உரிமைக்கான சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சங்க நிர்வாகிகள் மாயவன்,குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளும்,தீர்வுகளும் என்ற தலைப்பில் சங்கத்தின் தமிழ்மாநில துணைத்தலைவர் டி.லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.சட்டங்களும் உரிமைகளும் என்ற தலைப்பில் தமிழ்மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் ,ஸ்தாபன வளர்ச்சியும் விரிவாக்கமும் என்ற தலைப்பில் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.நிர்வாகிகள் குமார் உள்ளிட்ட திரளான மாற்று திறனாளிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

Sunday, February 19, 2012

கருத்தரங்கம்


புதுச்சேரி,பிப்-16
மாற்று திறனாலிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாலிகளின் கருத்தரங்கம்; புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி அனைத்தவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்கள் உரிமைகளுக்கான சங்கத்தின் திறந்தவெளி கருத்தரங்கம் காந்திவீதியில் நடைபெற்றது.சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆர்.சரவணன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார்.சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,மாற்றுதிறனாளிகள் எட்டு வகையாக உள்ளனர.; எந்த வகையாகவும் இன்றைக்கு ஒவ்வெருவர் வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.உடலின் மாறுபாட்டால் மட்டுமே மாற்றுதிறனாலிகள் என்று அடையாள படுத்தவது மட்டும் இல்லாமல் மன அழுத்த நோயாலும் பாதிக்கபடுபவர்கள் மாற்றுதிறனாலிகளாக உள்ளனர்.தேர்தல் நேரத்தில் தேர்தல் அடையாள அட்டை வழங்க வீடு தேடி வருவதைப்போல் மாற்றுதிறனாலிகளை கண்டரிய அடையாள அட்டையை மத்திய மாநில அரசுகள் வீடுதேடி வழங்குவதற்கு முன்வரவேண்டும்.மேலும் வருமை ஒழிப்பு திட்டத்தில் மாற்றுதிறனாலிகளை சேர்த்து நல திட்டங்களை வழங்க வேண்டும் என்றார்.மாற்றுதிறனாலிகளை பாதுகாத்துவருபவர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேரலாம் இது மற்ற சங்கங்களில் இல்லாத வசதி இந்த சங்கத்தில் உள்ளது என்றார்.

முன்னதாக சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.ராஜாங்கம்,சங்க பொருளாளர் குப்புசாமி,குமார்,கார்த்திக்,ஜெகன் உள்ளிட்ட திரளான மாற்றுதிறனாலிகள் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலையீட்டால் பெரும் வெற்றி! பார்வையற்ற ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கு-பணி உத்தரவு கிடைத்தது


Brindha Karat
புதுதில்லி, பிப்.14-

பார்வைத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகள் என்ற ஒரே காரணத்திற் காக, ஐஏஎஸ், ஐஎப்எஸ் போன்ற இந் திய நாட்டின் மிக உயரிய ஆட்சிப்பணி படிப்பில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றும்கூட பணி வாய்ப்பு மறுக்கப் பட்ட அவலத்திற்கு எதிராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட் டுடன் மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நடத்திய சட்டப் போராட்டம் மகத்தான வெற்றி பெற் றுள்ளது.

பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் மத்திய தீர்ப்பாணையத்தில் பல உத்தரவு களுக்குப் பின்னரும், 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் மற்றும் சிவில் சர்வீசஸ் தொடர்பான தேர்வுகளில் வெற்றிபெற்ற கண்பார்வையற்ற மாற் றுத்திறனாளிகளுக்கு பணி வழங்காமல், அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட அதிகாரவர்க்கத்தை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான அமைப்பு 2010ம் ஆண்டு வழக்கு தொடுத்தது.

2011 நவம்பர் 29ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக் கான அமைப்பின் பிரதிநிதிகள் குழு பிர தமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து முறையிட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சர் களையும் சந்தித்தது.

விடாமுயற்சி வெற்றிதரும் என் பதற்கேற்ப, பிருந்தா காரத் தலைமை யிலான குழுவினரின் தொடர்முயற்சிக ளால் பிரதமர் மன்மோகன் சிங் அறிவு றுத்தலின்படி மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கும் அஜித்குமார் (ஐஏஎஸ்), ஆஷிஷ் சிங் தாகூர் மற்றும் ஸ்ரீநிவாஸ் (ஐஎப்எஸ்), பூர்ணிமா ஜெயின் (ஐஆர் பிஎஸ்), ஷ்ரவண்குமார் (ஐசிஏ) பவன் குமார் (இந்தியத் தபால் துறை), சுபோத் குமார் (வெடிமருந்துத் தொழிற்சாலை) பணி உத்தரவு வழங்கப்பட்டது. மற் றும் இருவருக்கு இதுவரை பணி உத் தரவு வழங்கப்படவில்லை.

பிருந்தா காரத் நன்றி

இந்த விவகாரத்தில் அப்பட்டமான பாரபட்சம் மற்றும் மாற்றுத்திறனாளி கள் சட்டம் 1995க்கு எதிரான போக் கினை இடையிட்டுத் தடைசெய்த பிர தமர் மன்மோகன் சிங்கிற்கு 2012 பிப்ரவரி 13ம் தேதி பிருந்தா காரத் கடிதம் எழுதி தனது நன்றியைத் தெரி வித்தார். அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஐஏஎஸ் மற்றும் சிவில் சர்வீசஸ் பணிகளில் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைப் பணியில் சேர்த்துக் கொள்ளாத விவகாரத்தில் தலையிட்ட மைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் வந்த தேசிய மாற்றுத்திற னாளிகள் உரி மைக்கான அமைப்பின் பிரதிநிதிகள் குழு தங்கள் முன் வைத்த கோரிக்கை களில், இருவர் தவிர மற்றவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டு விட்டது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன் என்று கூறியுள்ளார்.